Headlines

admin

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை”

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை” 26.07.2023 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது….

Read More

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.

35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது. 26.07.2023 கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள்…

Read More

சிங்கள இனவெறி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட தழிழர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்புப் போராட்டம்.

26.07.2023 சிங்கள இனவெறி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட தழிழர்களுக்கு நீதிவேண்டி கனடா அரசாங்கம் நேரடியாக உதவிடக்கோரி ஒட்டாவா பாராளுமன்றம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலமக்கள் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டமையானது குறிப்பிடத்தக்கது. இதன்போது ஏனைய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர். புதைகுழிதொடர்பான பதாதைகள் அட்டைகளையும் ஏந்தி கொண்டு நின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் இருந்தமையால் வேற்று இனமக்கள் புரிந்து கொண்டு தாங்களும் உதவுவதாக க் கூறினர். கொட்டும் மழையின் மத்தியிலும்…

Read More

இராஜரிஷி, கவிச்சிங்கம் சு.அர்த்த நாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளில் நாட்டுக்கு ஆற்றிய சேவை,தியாகதைப் போற்றுவோம்!

27.07.2023 இராஜரிஷி, கவிச்சிங்கம் சு.அர்த்த நாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளில் நாட்டுக்கு ஆற்றிய சேவை,தியாகதைப் போற்றுவோம்! . இந்திய விடுதலைப் போராட்ட வீரர, தமிழக எல்லைப் போராட்ட தீரர், இந்தியாவில் முதல் மதுவிலக்கு சட்டம் வரக்காரணமானவர் மது ஒழிப்பும் போராளி, தேசிய கவி பன்மொழிப் புலவர் மரபுவழி மருத்துவம் அறிந்தவர். வானியல் சாஸ்திரம் தெரிந்தவர்,கர்நாடக இசைப்பாட்கர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், என்று பன்முகத் தன்மை கொண்டவர் இராஜரிஷி, கவிச்சிங்கம் அர்த்தநாரீர் வர்மா, அவர்கள் 27.07.1874 அன்று…

Read More

கேரள அரசின் பிடியில் இருந்து பத்மநாப சுவாமி கோவில் விடுவிக்கப்பட்டது.

கேரள அரசின் பிடியில் இருந்து பத்மநாப சுவாமி கோவில் விடுவிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி கோவில்கள் மீது அரசுகளுக்கு உரிமை இல்லை. இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள் மற்றும் செழுமையான பாரம்பரியம் கொண்ட பத்மநாபசுவாமி கோவில் இனி அரசுக்கு சொந்தமானது அல்ல, இப்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. அரச குடும்பத்துக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கை எதிர்த்து போராடி கோவிலை மீட்டுள்ளார்!. நாமும் இந்த வழக்கை மேற்கோள் காட்டி இந்து அறநிலையத்துறை வசம் உள்ள…

Read More

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு…

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு… கேரள மாநில அரசு தமிழக எல்லையோரங்களில் அத்துமீறி நடத்தி வரும் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தவில்லை என்றால் எல்லையோர மாவட்டங்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம். கேரளாவின் 66 வது நிறுவன தினத்தையொட்டி, மக்களுக்கு நிலம் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக,கேரள மாநில அரசு டிஜிட்டல் மறுகணிப்பைத் தொடங்கியது. 1966 ஆம் ஆண்டு கேரள அரசால் நிலத்தை மீள் அளவீடு செய்வதற்கான…

Read More

மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி.

25.07.2023, மதுரை அனைவருக்கும் வணக்கம் மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி நடைபெற இருக்கிறது தங்கும் இடம் உணவு சீருடைகள் அனைத்தும் இலவசம் இந்த பயிற்சியில் பிஇ(BE )படித்த மாணவர்கள் மெக்கானிக்கல் Mechanical Technician/ எலக்ட்ரிகல்( Instrumentation Technician ) பிரிவு மாணவர்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணியில் சேரலாம் மற்றும் டிப்ளமோ (DIPLOMA) படித்த மாணவர்கள் மெக்கானிக்கல்/ எலக்ட்ரீசியன்/ இந்த பிரிவு பயின்றவர்கள் இந்த…

Read More

ரெடியா? ரூ.56,000 டூ ரூ.1.77 லட்சம் சம்பளம்.. இந்திய தர கவுன்சிலில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி!

டெல்லி: இந்திய தர கவுன்சில் காலியாக உள்ள காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை பரிசோதகர் பணிக்கு 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தர கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இங்கு காப்புரிமை மற்றும் வடிவமைப்புக்கான பரிசோதகர் ( Examiner of Patents…

Read More

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மாதம், வாரக் கடைசியில் இரண்டு நாட்கள் தினம் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடக்கும் தேவாரப் பதிகங்களின் பொருள் விளக்கப்பட்டு பாடவும் கற்றுக் கொடுக்கப்படும் எட்டு வயது குழந்தைகள் முதல் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடன் எனக்குத் தெரிவிக்கவும்(9490748827)க.சின்னையா வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கின்றன வெள்ளி…

Read More

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்ட புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) நினைவுநாள்.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார் இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[2] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்….

Read More